நடிகர் சங்கத்தேர்தல்: விஷால் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்


நடிகர் சங்கத்தேர்தல்: விஷால் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 12 July 2019 1:11 PM GMT (Updated: 12 July 2019 1:11 PM GMT)

விஷால் கோரிக்கையை 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை,

நடிகர் சங்கத்தேர்தல் ஜூன் 23-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.  நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சவுத் இந்தியன் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  நடிகர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகளை  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்களிக்க முடியாது என்பதால்  வாக்குகளை எண்ண வேண்டும் என்று  நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஷாலின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது.  மேலும் வாக்களர் பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க, ஆக.2ம் தேதி வரை பதிவாளருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஷாலின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்  ஆகஸ்ட் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.  வழக்கு நிலுவையில் உள்ளதால் வாக்குகளை என்ன அனுமதிக்க முடியாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

Next Story