சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 13 July 2019 1:23 AM GMT (Updated: 13 July 2019 1:23 AM GMT)

சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலையில் எவ்வித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்பின் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.

இந்நிலையில், கடந்த 5ந்தேதி மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்தது.  இதன்படி, சென்னையில் கடந்த 6ந்தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று 3வது நாளாக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.75.70க்கும், டீசல் விலை முந்தைய நாள் விற்பனையை விட 11 காசுகள் குறைந்து ரூ.69.96க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் தொடர்ந்து 4வது நாளாக விலையில் எவ்வித மாற்றமுமின்றி ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் 2வது நாளாக ரூ.69.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story