செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை,
சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2017 - 2018 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மடிக்கணினி வழங்கப்படும். மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற 2000 சொற்றொடர்கள் கொண்ட மென்பொருள் வழங்கப்படவுள்ளது. இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போதுள்ள +2 வகுப்பிற்கான பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வு மட்டுமல்லாது அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும். 3 ஆண்டுகள் அவகாசம் இருந்த போதும், இரண்டே ஆண்டில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story