நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் வெட்டிக்கொலை
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரெட்டியார்பட்டியில் உமா மகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப்பெண் உள்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். அவர்களுடைய உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சனையா இல்லையா அரசியல் மோதல் விவகாரமா என்பது தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொலை நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story