"நீர் நிலைகளை உடனடியாக தூர்வார வேண்டும்" - தமிழக அரசுக்கு, விஜயகாந்த் கோரிக்கை


நீர் நிலைகளை உடனடியாக தூர்வார வேண்டும் - தமிழக அரசுக்கு, விஜயகாந்த் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2019 1:30 PM GMT (Updated: 28 July 2019 1:30 PM GMT)

நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி மழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி மழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மழைநீர் சேமிப்பு மற்றும் தடுப்பணைகள் அமைப்பதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

மதுராந்தகம் ஏரியை தூர் வாரி, அந்த பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story