எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 31 July 2019 10:51 AM GMT (Updated: 31 July 2019 10:51 AM GMT)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்கள் வருவதால், மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

வேலூர்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:- 

மக்களவை தேர்தலையொட்டி திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்கள் வருவதால், மத்திய அரசு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என கூறினார்.

Next Story