33வது நாள் : கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்...


33வது நாள் : கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்...
x
தினத்தந்தி 2 Aug 2019 6:21 AM GMT (Updated: 2 Aug 2019 6:21 AM GMT)

நின்ற கோலத்தின் இரண்டாவது நாளான இன்று, கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார்.

சென்னை,

காஞ்சீபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 33-ம் நாளான இன்று, அத்திவரதர், கரும்பச்சை வண்ண பட்டு உடுத்தி, மல்லிகை, சம்பங்கி, செண்பக  மலர் மாலை அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார். 

காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தரிசன வரிசை எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நெரிசல் இன்றியும், விரைவாகவும் சென்று தரிசித்து வருகிறார்கள்.

ஆடிப்பூரத்தையொட்டி, நாளை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்குப் பிறகு தரிசனம் நிறுத்தப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story