சென்னை தீவு திடலில் பிரமாண்ட மாரத்தான் போட்டி; 5,800 பெண்கள் பங்கேற்பு


சென்னை தீவு திடலில் பிரமாண்ட மாரத்தான் போட்டி; 5,800 பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 7:31 AM GMT (Updated: 4 Aug 2019 7:31 AM GMT)

சென்னை தீவு திடலில் நடந்த பிரமாண்ட மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்து 800 பெண்கள் பங்கேற்றனர்.

சென்னை,

சென்னை தீவு திடலில், பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.  பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மற்றும் நடுத்தர வயது கொண்ட பெண்கள் என 5 ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.  பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் சியாமளா தேவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Next Story