நீலகிரியில் கனமழை; 4 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு


நீலகிரியில் கனமழை; 4 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 2:57 AM GMT (Updated: 6 Aug 2019 2:57 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 4 தாலுகாக்களை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இதனிடையே நீலகிரியில் தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story