காஷ்மீர் மக்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
காஷ்மீர் சட்ட திருத்தங்கள் மூலம் காஷ்மீர் மக்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்,
காஷ்மீர் சட்ட திருத்தங்கள் மூலம் 70 ஆண்டுகளாக அவதிப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. காஷ்மீரின் இளைய தலைமுறையினரை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.
Related Tags :
Next Story