தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 4:29 AM GMT (Updated: 8 Aug 2019 4:29 AM GMT)

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 6ந்தேதி வெளியிட்ட செய்தியில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இது, 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாக வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.  இதேபோன்று கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தது.

இதன்படி, தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனால் வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story