நொடிக்கு... நொடி... மாறும் நிலவரம் பதட்டத்தில் வேட்பாளர்கள் ; ஏ.சி.சண்முகம் 13104 வாக்குகள் முன்னிலை


நொடிக்கு... நொடி... மாறும் நிலவரம் பதட்டத்தில் வேட்பாளர்கள் ; ஏ.சி.சண்முகம் 13104 வாக்குகள் முன்னிலை
x
தினத்தந்தி 9 Aug 2019 5:45 AM GMT (Updated: 9 Aug 2019 5:45 AM GMT)

வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.  

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி  ஏசி சண்முகம் 187750 வாக்குகளும், கதிர் ஆனந்த  174646  வாக்குகளும்  நாம் தமிழர் கட்சி தீப லட்சுமி 9273  வாக்குகளும் பெற்று உள்ளனர். 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 13104 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Next Story