கவர்னர் மாளிகையில் அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது.
சென்னை,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை வெளியிடுவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் மாளிகையில் அமித்ஷாவை, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்படுகிறது.
Related Tags :
Next Story