சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி


சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 15 Aug 2019 3:36 AM GMT (Updated: 15 Aug 2019 3:36 AM GMT)

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் அமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார் .

சென்னை,

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார். 

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  திறந்த வேனில் நின்ற படி  காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல் அமைச்சர் பழனிசாமி,  கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 


Next Story