தேனீக்கள் கொட்டியதில் 80 வயது மூதாட்டி பரிதாப பலி, 12 பேர் காயம்
கருங்கல்பாளையம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 80 வயது மூதாட்டி பரிதாப பலியாகியுள்ளார், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரோடு,
கருங்கல்பாளையத்தில் உள்ளுர் மக்கள், அங்குள்ள கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக பொங்கல் வைத்தனர்.அப்போது சமையல் அடுப்பில் இருந்து ஏற்பட்ட புகை அருகிலியிருந்த மரத்தில் உள்ள தேனீக்கூட்டை கலைத்ததை தொடர்ந்து, தேனீக்கள் அங்கிருந்தோரை விரட்டி கொட்டியதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதில் 80-வயது மதிக்கத்தக்க மூதாட்டி குழந்தையம்மாள், சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மற்ற 12 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story