பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்


பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Aug 2019 5:37 AM GMT (Updated: 20 Aug 2019 5:37 AM GMT)

பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது பால் விலை உயர்வு ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

நெல்லை,

ஒண்டி வீரன் 248-வது நினைவு நாளையொட்டி  நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Next Story