தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு
வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை, நாகை இடையே 3 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் காற்று சங்கமம் நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.
ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 18 செ.மீ. மழை பதிவு ஆகி உள்ளது. சென்னையில் இயல்பை விட மழை 5 செ.மீ . அதிகம் என கூறினார்.
Related Tags :
Next Story