கஞ்சா வியாபாரி ரகளை: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்


கஞ்சா வியாபாரி ரகளை: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:43 AM GMT (Updated: 20 Aug 2019 11:43 AM GMT)

கஞ்சா விற்பனையை தடுத்ததாக கூறி கஞ்சா வியாபாரி பொதுமக்களை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே  கோவிந்தவாடி அகரம் பகுதியில் கஞ்சா வியாபாரி  புருஷோத்தமன் என்பவர்  கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது  அதனை  தடுக்க வந்த பொதுமக்களை  பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி ரகளையில்  ஈடுபட்டார்.  

இந்த தாக்குதலில் தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  6 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story