சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனை
சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.74.62க்கும், டீசல் விலை ரூ.68.79க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.74.62க்கும், டீசல் ரூ.68.79க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் தொடர்ந்து 3வது நாளாக ஒரே விலையிலும், டீசல் தொடர்ந்து 2வது நாளாக ஒரே விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story