தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதாலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் , மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story