சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் கைது; நாட்டிற்கே அவமானம் - மு.க.ஸ்டாலின்


சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் கைது; நாட்டிற்கே அவமானம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Aug 2019 9:23 AM GMT (Updated: 22 Aug 2019 9:23 AM GMT)

சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவமானமானது என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவமானமானது, இந்த செயலை நான் கண்டிக்கிறேன். உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை, அதை புரிந்து கொள்ளுங்கள்.

இன்று டெல்லியில் திமுக முன்னின்று பல்வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளது. அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி. 

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர், அவருடைய கருத்துக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது என கூறினார்.

Next Story