தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை


தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2019 2:44 AM GMT (Updated: 23 Aug 2019 2:44 AM GMT)

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும்,  லஷ்கர் இ  தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.


Next Story