கணவரை மிரட்டுவதற்காக தூக்குப்போடுவது போல் நடித்த பெண், கழுத்து இறுகி சாவு


கணவரை மிரட்டுவதற்காக தூக்குப்போடுவது போல் நடித்த பெண், கழுத்து இறுகி சாவு
x
தினத்தந்தி 23 Aug 2019 9:00 PM GMT (Updated: 23 Aug 2019 7:42 PM GMT)

தனது கணவரை மிரட்டுவதற்காக வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டுக்கொள்வது போல் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கி உள்ளது.

நாகை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கநல்லூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ஜமால் மைதீன். இவருடைய மனைவி ஜெசிமா(வயது 50). ஜமால் மைதீன் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் ஜெசிமா, தனது கணவர் ஜமால் மைதீனை மதுகுடிக்கக்கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனாலும் அவர், தொடர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெசிமா தனது கணவரை மிரட்டுவதற்காக வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டுக்கொள்வது போல் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கி உள்ளது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து ஜெசிமாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெசிமா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று ஜெசிமாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story