தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு


தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 1:10 PM GMT (Updated: 25 Aug 2019 1:10 PM GMT)

தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிலையில்,  தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு  உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செப்.14 முதல் நவ.14 வரை தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சேர்க்கை முகாம் நடத்தப்படும்.  2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தொகுதிக்கு 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு புதிய மொபைல் ஆப் உருவாக்கப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் திமுகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.  தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story