மாவட்டங்களை பிரிப்பது குறித்து மக்களிடம் முறையாக கருத்து கேட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
மாவட்டங்களை பிரிப்பது குறித்து மக்களிடம் முறையாக கருத்து கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம்,
சேலம் தாரமங்கலத்தில் நிறுவப்பட்டுள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
மத்தியில் மாநிலத்தை பிரிக்கிறார்கள். மாநிலத்தில் மாவட்டத்தை பிரிக்கிறார்கள். மாவட்டங்களை பிரிப்பது குறித்து மக்களிடம் முறையாக கருத்து கேட்க வேண்டும். சேலம் மாவட்டம் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் முதலமைச்சரை மக்களுக்கு தெரியாது. தமிழகம் முழுவதும் என்னை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். வெளிநாடு செல்லும் முதலமைச்சருக்கு வாழ்த்துகள், முதலீடுகளுடன் வந்தால் வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.
திமுக வெற்றி எல்லாம் வெற்றி அல்ல என்று கூறுகிறார்கள். ஒரே ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் வெற்றி தான், 40 மதிப்பெண்களுக்கு 39 மதிப்பெண்கள் பெரியதா? ஒரு மதிப்பெண் பெரியதா? என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story