தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 1 Sep 2019 10:13 AM GMT (Updated: 1 Sep 2019 10:13 AM GMT)

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து  ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் உள்ள முதல்- அமைச்சர் பழனிசாமி, தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Next Story