பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடக்கம்


பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடக்கம்
x
தினத்தந்தி 12 Sep 2019 1:22 AM GMT (Updated: 12 Sep 2019 1:22 AM GMT)

2020 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

சென்னை,

தீபாவளி, பொங்கல் பண்டிகைககளின் போது  சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், ரெயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும். 

ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து,  ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்.12) முன்பதிவு செய்யலாம். சரியாக காலை 8 மணிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

அதேபோன்று ஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி(திங்கட்கிழமை) முன்பதிவு செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 

பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும்..அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற பண்டிகை நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடுவதால், இன்றும் இதே நிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story