வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 5:43 AM GMT (Updated: 12 Sep 2019 5:43 AM GMT)

வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, எழுந்த சூழ்நிலை காரணமாக அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா உள்ளிட்ட சில தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ம.தி.மு.க. வெளியிட்ட செய்திக்குறிப்பில், ம.தி.மு.க. சார்பில் 15ந்தேதி அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனத்தில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கலந்து கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளார்.  காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.  எனவே, சுப்ரீம் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்காக வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரியதற்கு சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.  வழக்கை எப்பொழுது விசாரிப்பது என தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று ரமணா அமர்வு தெரிவித்துள்ளது.

Next Story