பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம்; ராமதாஸ் பேச்சு


பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம்; ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2019 3:23 PM GMT (Updated: 17 Sep 2019 3:23 PM GMT)

பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம் என காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய ராமதாஸ் கூறினார்.

காடுவெட்டி,

அரியலூரில் உள்ள காடுவெட்டி பகுதியில் காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.  இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.  அக்கட்சியின் தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி அதிகளவில் குவிந்திருந்தனர்.  இந்த நிகழ்ச்சியில் வன்முறை எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்றார்.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம் என கூறினார்.

Next Story