திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு
திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் அமராவதி அணையிலிருந்து பழைய வாய்க்கால் பாசன பகுதிகளின் குறுவை சாகுபடிக்காக வரும் 20ந்தேதி முதல் 2020ம் ஆண்டு ஜனவரி 18ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
10 பழைய ராஜவாய்க்கால் பாசன பகுதிகளுக்கு வரும் 20ந்தேதி முதல் டிசம்பர் 4ந்தேதி வரை நீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதேபோன்று புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20ந்தேதி முதல் டிசம்பர் 4ந்தேதி வரை நீர் திறக்கவும் முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
Related Tags :
Next Story