இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்


இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 22 Sep 2019 9:35 AM GMT (Updated: 22 Sep 2019 10:47 AM GMT)

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ந் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனுடன் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 

அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றால் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

Next Story