9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்


9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை  மையம்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:59 AM GMT (Updated: 25 Sep 2019 10:59 AM GMT)

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு மழையின் தாக்கம் குறையும்.

ஆந்திராவின் வடக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி கர்நாடகா நோக்கி சென்றதால், மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் மதுக்கூர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Next Story