அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்


அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 25 Sep 2019 1:21 PM GMT (Updated: 25 Sep 2019 1:21 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி நடைபெறுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக  தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின்  சிஇஜி கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 

கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story