இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பற்றி மத்திய தலைமை முடிவு செய்யும்; பொன்.ராதாகிருஷ்ணன்


இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பற்றி மத்திய தலைமை முடிவு செய்யும்; பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 28 Sep 2019 12:34 PM GMT (Updated: 28 Sep 2019 12:34 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்குவது பற்றி மத்திய தலைமை முடிவு செய்யும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நா. புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அ.தி.மு.க. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.  அக்கட்சியை சேர்ந்த நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும், முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, விழுப்புரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பது குறித்து, மத்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறினார்.  தமிழகத்தில் தமிழ் அழிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்.

Next Story