ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 29 Sep 2019 10:43 AM GMT (Updated: 29 Sep 2019 10:43 AM GMT)

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் செய்தியாளர்களிடம்  பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

நேர்மையான வழியில் தான் மாணவர்கள் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும்.

குறுக்கு வழியில் செல்லக்கூடாது. என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் முடிவு செய்ய வேண்டும்.

மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம். 

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story