கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்


கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:58 AM GMT (Updated: 11 Oct 2019 10:58 AM GMT)

சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.

சென்னை,

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது.  இதற்காக  இன்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு  சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார்.  சிறிது நேரம் ஓய்வெடுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்,  சுமார்  4 மணியளவில் காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் சென்று கொண்டிருக்கிறார்.   

சீன அதிபர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  சாலையின் இருபுறமும் கலை நிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.  வழி நெடுகிலும் இரு நாட்டு கொடிகளை அசைத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Next Story