மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி


மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி
x
தினத்தந்தி 11 Oct 2019 12:45 PM GMT (Updated: 11 Oct 2019 12:45 PM GMT)

மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

சென்னை,

மாமல்லபுரம்  ஐந்து ரதம் பகுதியை சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி பார்வையிட்டனர். முன்னதாக  அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இரு தலைவர்களும் பார்வையிட்டனர். மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி.

வெண்ணெய் உருண்டை பாறை முன் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தங்களது கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடியபடி இளநீர் பருகினர். இந்த உரையாடல் 15 நிமிடம்  நடைபெற்றது.

Next Story