பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் -கவிஞர் வைரமுத்து


பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் -கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 14 Oct 2019 9:53 AM GMT (Updated: 14 Oct 2019 9:53 AM GMT)

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வைரமுத்து கூறியதாவது:-

கலைஞர் பிறந்த மண்ணில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பான சில கருத்துகளை அவரிடம் கூறி உள்ளேன். பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான  வேட்டி கட்டியது நன்றாக இருந்தது, அதை அவர் தொடர வேண்டும் என கூறினார்.

Next Story