அ.தி.மு.க. ஆட்சியை பொய் சொல்லி கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள்; துணை முதல் அமைச்சர் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியை பொய் சொல்லி கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள்; துணை முதல் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2019 3:16 PM GMT (Updated: 15 Oct 2019 3:16 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியை பொய் சொல்லி கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள் என்று துணை முதல் அமைச்சர் பேசியுள்ளார்.

நாங்குநேரி,

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. வருகிற 19ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய இருக்கிறது.  இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் வி. நாராயணனுக்கு ஆதரவாக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மறுகால்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்டார்.  அவர் தொண்டர்கள் முன் பேசும்பொழுது, ஏதாவது பொய் சொல்லி அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள், ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.  யாருடைய ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்று சிந்தியுங்கள் என பேசினார்.

Next Story