பரம்பிக்குளம், ஆழியாறு, பாண்டியாறு, புன்னம்புழா திட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் குழு அமைப்பு


பரம்பிக்குளம், ஆழியாறு, பாண்டியாறு, புன்னம்புழா திட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் குழு அமைப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 10:54 AM GMT (Updated: 17 Oct 2019 10:54 AM GMT)

தமிழக-கேரள முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறுஆய்வுக் குழு, பண்டியாறு-புன்னம்புழா திட்டம் தொடர்பான குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழக - கேரள முதலமைச்சர்கள் இடையே நதி நீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்த மறுஆய்வு மற்றும் அதனைச் சார்ந்த இனங்கள் குறித்து ஒரு குழுவும்,  பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மற்றொரு குழுவும் அமைக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக - கேரளா அரசுகளின் செயலாளர்கள் நிலையில் குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குழுக்களின் உறுப்பினர்களாக தமிழக தரப்பு அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு தமிழகம் - கேரளா இடையேயான நதி நீர்ப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story