எந்த காலத்திலும் முதல் அமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்; துணை முதல் அமைச்சர் பேச்சு


எந்த காலத்திலும் முதல் அமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்; துணை முதல் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2019 3:50 PM GMT (Updated: 17 Oct 2019 3:50 PM GMT)

எந்த காலத்திலும் முதல் அமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

நாங்குநேரி,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், நாங்குநேரியில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி நடுவர் மன்றத்தை கலைப்போம் என ராகுல் காந்தி சொல்வது தமிழகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.

தமிழகத்திற்கு ராஜ துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி தான் நாங்குநேரியில் போட்டியிடுகிறது.  அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.  மு.க. ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல் அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று பேசினார்.

Next Story