சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்து இருந்தது.
இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்துள்ளது. தொடர்ந்து தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், கிண்டி, மாம்பலம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. காலையில் ஒரு மணிநேரம் மழை விட்டிருந்தது. பின்பு மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று திருவள்ளூரில் ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story