மதியம் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-65.79 % நாங்குநேரி-52.18% வாக்குப்பதிவு
மதியம் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 %, நாங்குநேரி தொகுதியில் 52.18 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை,
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 32.54 சதவீத வாக்குகள் பதிவாகின. நாங்குநேரி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 23.89 சதவீத வாக்குகள் பதிவாகின.
மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 சதவீத வாக்குகள் பதிவாகின. நாங்குநேரி தொகுதியில் 41.35 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.71சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் தற்போது, மதியம் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 %, நாங்குநேரி தொகுதியில் 52.18 % வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 56.16 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
Related Tags :
Next Story