சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை


சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை
x
தினத்தந்தி 22 Oct 2019 1:02 AM GMT (Updated: 22 Oct 2019 2:01 AM GMT)

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த ஞாயிற்று கிழமை தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதல் மித அளவிலான மழை பெய்து வருகிறது.

சென்னையில், கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, அண்ணாநகர், மீனம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், சோழவரம், புழல், மாதவரம் மற்றும் பூண்டி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Next Story