தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 22 Oct 2019 3:30 AM GMT (Updated: 22 Oct 2019 3:30 AM GMT)

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த மூன்று தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழையும், தென்தமிழக மாவ‌ட்டங்கள் மற்றும் நாகை, கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையிலும் நகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். தென்மேற்கு வங்கக் க‌டல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அந்த கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story