போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் நாளை மறுநாள் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் நாளை மறுநாள் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 22 Oct 2019 2:26 PM GMT (Updated: 22 Oct 2019 2:26 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை மறுநாள்(அக்.,24) தீபாவளி போனஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசுப் போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது 

இந்நிலையில், போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு  தீபாவளி போனஸ்  20 சதவீதம் நாளை மறுநாள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கரூரில் பேட்டி அளிக்கையில் கூறினார். 


Next Story