திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் 15 மணிநேரத்திற்கு மேல் தீவிரம்


திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் 15 மணிநேரத்திற்கு மேல் தீவிரம்
x
தினத்தந்தி 26 Oct 2019 3:35 AM GMT (Updated: 26 Oct 2019 5:03 AM GMT)

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன்  சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.

ஆழ்துறை கிணற்றிற்குள் மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 



Next Story