குழந்தை சுர்ஜித்தை மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு


குழந்தை சுர்ஜித்தை  மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு
x
தினத்தந்தி 26 Oct 2019 12:21 PM GMT (Updated: 26 Oct 2019 12:25 PM GMT)

ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை சுர்ஜித் 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்றது.

குழந்தை  ஆழ்துளை கிணற்றில் சிக்கி 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது 85 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றுவிட்டது.  குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது

ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை மணிநேரத்தில் இதைச் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Next Story