மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 4:55 AM GMT (Updated: 30 Oct 2019 4:55 AM GMT)

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பழனி,

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமிமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  கூறியதாவது:- 

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.

Next Story