கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்
கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதில் சிரமம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை விடப்படுகின்றன. அந்த வகையில், எந்தெந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற விவரத்தை கீழ் காணலாம்.
* கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கனமழை காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
* தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Related Tags :
Next Story